Sunday, 25 December 2011

தானம் - தமிழ் கவிதைகள்


ஆவினமே நீர் இரத்த தானம்
பற்றி எங்கு அறிந்தீர் .....?
தினமும் உதிரத்தை பாலாக்கி
மடுவில் சுரந்து தருகின்றீர்

புல்லினமே உறுப்பு தானம்
பற்றி உமக்கு யார் சொன்னது
அனைத்து பாகத்தையும்
தாரை வார்த்து தருகிறாய்

தானம் என்பது கற்று வருவதில்லை
தானாய்த் தோன்றும் தர்ம சிந்தை !

No comments:

Post a Comment