Sunday, 25 December 2011

புலிகளை விரட்டிப் பிடியுங்கள் - தமிழ் கவிதைகள்


கலாச்சாரம் விலைபோகிறதாம்
நிர்வாண நடனம் கலையாகப் போனதாம்
நிலை குலைந்ததாம் பண்பாடு விலை மாதரால்
சீறி எழுகின்றன அரசியல் வர்கங்கள்
சிந்து பாடுகின்றன சமயச் சங்கங்கள்

வேலை இல்லாத் திண்டாட்டம்
வறுமையின் உச்சகட்டம்
வயிற்ற்றுப் பசி நோய் கொடுமை
வரிந்து வட்டமிடும் ஆணினம்
விலை போனோம் வேதனையில்
வாடகைக்கு வந்து போகும்
வாடிக்கையாளரிடம்
சவமாய் எம்மை கொடுக்கின்றோம்
வேடிக்கையானதோ எம் வாழ்வு

வெளிச்சத்தில் பகட்டுக் காட்டும்
நாட்டுப் புலிகள் எல்லாம்
மன்மத வேட்டைக்கு
ஒதிங்கிடுவார் இருட்டறையில்
மாமூல் மறுக்கப் பட்டால்
மாதக் கடைசி கணக்குக்காய்
வலை வீசி பிடித்திடுவார் காவலர் எமை
எமக்கு கருத்தாய் வேட்டு வைத்தோர்
மானை மட்டும் பிடித்து விட்டு
புலியை கோட்டை விட்டு விட்டார்

எம் இருட்டறை ரகசியத்தை
யான் வெளிச்சமிட்டுக் காட்டினால்
வீதிக்கு வந்திடுவார்
பல பெரும் புலிகள்
இந்த வேட்டையாடும் மன்மதரை
விரட்டி அடித்து பிடிக்காமல்
வீணே எம்மை பழிக்கின்றீர்
வெந்தணலில் எண்ணெய் ஊற்றுகிரீர் !!!

No comments:

Post a Comment