எல்லோருக்கும் கல்வி
ஏட்டில் முடிந்தது
எல்லோருக்கும் வேலை
வாதத்தில் முடிந்தது
எல்லோருக்கும் நல வாழ்வு
போராட்டத்தில் நடக்குது
எல்லோருக்கும் வீடு
வீதியிலே கிடக்குது
எல்லோருக்கும் நீதி
இருட்டறையில் முடிந்தது
ஜாதிச் சண்டைகள்
சரித்திரம் படிக்குது
தியாகமும் தர்மமும்
தெருவிலே நிற்குது
காத்திருந்த சமுதாயம்
பொறுத்திருந்து தோற்றது
பார்த்திருந்த பாரதத்தாய்
பதை பதைத்து அழுகின்றாள்
வலிமைகொண்ட புதல்வர்களே
அவள் துயர் துடைக்க வாருங்கள்!!
No comments:
Post a Comment