Sunday, 25 December 2011

குயவனின் கை வண்ணம் - தமிழ் கவிதைகள்


ஊருக்கு வெளியே குயவர் குடி
அவர் வாழ்க்கை போகுது மண் பிணைந்தபடி

நனைந்து குலைந்த களி மண்ணை
நயமாய் கையில் பினைந்திடுவார்

தன் கற்பனைத்திரனுக்கேற்றபடி
களிமண்ணுக்கு உரு கொடுத்திடுவார்

உருண்டையாக அவர் பிடித்தார்
பந்து போல் உருண்டது

உருளையாக உருட்டினார்
அரவம் போல் நெளிந்தது

கடவுள் உருவை அதில் பொறித்தார்
கருணை மழை பொழிந்தது

தாயுடன் சேயை புனைந்தேடுத்தார்
தன் பொக்கை காட்டி சிரித்தது

காட்டு அரசனை அதில் வடித்தார்
அது கர்ஜித்து நின்றது

வண்ண மயில் அதில் செய்தார்
நம் கருத்தை கவர்ந்து சென்றது

குழந்தை உள்ளம் யாவையும்
குயவன் கையின் களிமண்ணே

அதில் நல்ல உருவம் வடித்திடுவோம்
நாளை உலகம் அவர் கையில்

No comments:

Post a Comment