Sunday, 25 December 2011

இனி ஒரு சுதந்திரம் வேண்டும் - தமிழ் கவிதைகள்


முன்னூறு ஆண்டுகள் வெள்ளையர் ஆட்சியில்
மூழ்கிக்கிடந்தோம் கிணற்றுத் தவளையாய்

வீறு கொண்டு எழுந்தோம் வீர சுதந்திரம் பெற்றோம்
நாடு தழுவிய நல்லாட்சியாய் குடியாட்சி மலர்ந்தது

அடிப்படை சுதந்திரம் அனைத்தும் பெற்றோம்
பார்புகழ் பாரதம் எனப் பெயர் பெற்றோம்

இன்று இந்தியா வளரும் வல்லரசாம்
இங்கு நடப்பது ஜனநாயக நல்லரசாம்

எதிலும் சுதந்திரம் எங்கும் சுதந்திரம்
எவர்க்கும் பூமியில் எதற்கும் அஞ்சோம்

எதற்கு வேண்டினும் மனுக் கொடுக்கலாம்
எதிர்ப்பார் யாரும் இங்கு இலர்

எங்கு வேண்டினும் நீ செல்லலாம்
ஏன் என்று கேட்ப்பார் எவரும் இலர்

எதற்கு வேண்டினும் கோஷம் போடலாம்
பக்கத் துணையாய் பாதுகாவலருடன்

எப்பொழுது வேண்டினும் போராடலாம்
துணைவருவார் பலர் கூட்டம் கூட்ட

ஆனால் கோரிக்கை மனுக்கள்
கோரிக்கை அற்றுப் போகும்
போராட்டமும் கோஷமும்
வேடிக்கை ஆகிவிடும்

பந்தோபஸ்த்து காவலர்கள் பதுங்கி நின்றிடுவார்
பாதகம் அரசுக்கு என்றுப்பட்டால்
நம்மை பதை பதைக்க தாக்கிடுவார்
வேண்டாத வழக்கு போட்டிடுவார்

இங்கு நடப்பது ஜனநாயக சர்வாதிகாரம்
நமது உரிமைகள் மீண்டும் பெற
இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
இன்றே வீரு கொண்டு எழுவீர்

நாட்டை வேட்டை ஆடி
தன நலம் சேர்க்கும் !
நயவஞ்சக கூட்டத்தை
வேரோடு மாய்த்திட
இன்றே வீரு கொண்டு எழுந்திடுவீர் !

No comments:

Post a Comment