Sunday, 25 December 2011

இலவு காத்தக் கிளி - தமிழ் கவிதைகள்


நல்லிலக்கண நங்கை ஒருத்தி
மாலை சூடி நல இல்லறம் புகுந்தாள்
கைப் பிடித்த கணவன் மனம் பிசகாது
நாளும் அவன் நலம் நாடி நின்றாள்
இவள் அல்லவோ மங்கையர்க் கரசி
மனமார ஊர் சொல்லிற்று

கைபிடித்தவளை கலங்காமல் காக்க
கைப்பொருள் தேடிட நினைத்தான் தலைவன்
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
நண்பர்கள் பலரும் ஆசைகூறினர்
அன்பு மனைவியின் அனுமதியுடன்
ஆவலில் சென்றான் வளைகுடா நாடு
பிரியாவிடையுடன் நின்றாள் நங்கை
பொறுத்திரு பொருளுடன் வருவேன் என்றான்

நம்பிக்கையுடன் காத்திருந்தாள் நங்கை
வருவான் தலைவன் தன வாட்டம் போக்கிட
நாட்கள் மெல்ல உருண்டன
மாதங்கள் பல சென்றன
காத்திருந்த நங்கையோ
காலாவதியான பொருளானாள்
வாட்டம் அவளை வாட்டியது
ஏக்கம் அவள் இளமையை கொன்றது

சில நிமிடம் பேசும் தொலைபேசி
சில நேரம் பேசும் இன்டர்நெட்டு
இப்படியே போனது இவள் வாழ்க்கை
பித்துப் பிடித்து பேதலித்து
சில நாட்கள் வந்த தொலைபேசியும்
பேசா மடந்தையாய் மௌனித்தது
கையில் இருப்பு குறைந்து போனது
கைப்பொருள் யாவும் அடகு போனது
செய்வது அறியாது திகைத்தாள்
சேதி எவரும் சொல்ல வருவாரா என

எதிர் பார்த்தது போல் சேதி வந்தது
மங்கையின் உள்ளம் துள்ளி எழுந்தது
ஆவலாய் ஓடினால் சேதி அறிய
அதிர்ச்சியில் உறைந்தாள் சேதி கேட்டு
வளம் தேட சென்ற தலைவன்
வானுலகம் சென்றான் என
பல நாட்கள் ஆயிற்று
உடலை பதனிட முடியவில்லை
பல லட்சம் அவள் கொடுத்தால்
உடலை மீட்டு வரலாம் என

கையில் இருப்பு ஏதும் இல்லை
கழுத்தில் தாலியும் அடகு கடையில்
எஞ்சி இருப்பது அவள் மானமே
மனம் துஞ்சி அழுதால் துயரத்தில்..............

No comments:

Post a Comment