ஜாதி என்னும் புற்று நோய்
கொள்ளை ஆட்டம் போடுது
மதம் மதபிடித்த யானைகள்
யாத்திரிகை போகுது
அரசியல் ஆதரவு திமிரில்
கொள்ளை பணம் சேர்த்து
கோபுரம் கட்டி கொடியேத்துது
ஊழலும் லஞ்சமும்
ஊரில் ஊஞ்சல் கட்டி ஆடுது
நிர்வாக சீர்கேடுகள்
நிதி திரட்டி வந்து
திருவிழா கொண்டாடுது
நிதிக் கம்பனி மோசடி
சதிராட்டம் ஆடுது
பதவிகளை பாதுகாக்க
பணம் பந்தாடுது
பாதியிலே போய்விட்டால்
கட்சி தாவல் நடக்குது
பணம் கட்டாய் கண்டவுடன்
நீதி தேவதை கூட
கண்ணாம்பூச்சி ஆடுகிறாள்
சமூக சேவைகள்
சம்பாத்தியம் பண்ணுது
சாக்கடை புழுக்களாய்
மக்கள் வாழ்வு நடக்குது
தூரெடுத்து சுத்திகரிக்க
மீண்டும் வந்து பிறக்கட்டும்
தீவிரவாத அண்ணல் காந்தி
No comments:
Post a Comment