Wednesday, 4 January 2012

எழுத்து(.)காமிற்கு என் தலை வணக்கம்


என் உள்ளக் கிடங்கின் உணர்வுகளை 
எழுத்து வடிவில் உரு கொடுக்க திளைத்தேன் 
கருத்துக்கினிய கருப்பொருள்கள் 
உருவெடுத்தன என் உள கருவறையில் 
பெருகிய ஆடி வெள்ளம்போல் 
நாடி வந்தனள் தமிழன்னை 
ஆவி தழுவிட அனைத்தனள் எனை 
பாவில் அதை வடித்தேடுத்தேன் 

கிளர்ந்து வந்த ஆவலினால் 
தேடிச் சென்றேன் அதை பிரசுரிக்க 
என் தூரிகையின் எண்ணச் சிதறல்கள் 
சிதறி விழுந்தன கழி பொருளாய் 
தளர்ந்து போனது என் ஆவல் 
உலர்ந்து போனது என் கவி நடை 
தூர்ந்து போனது மனக்கிணறு 
துவண்டு போனது என் எழுத்தாணி 
எழுத்துலகே எனை வெறுத்ததுபோல் 
வெருமையாயிற்று என் மனம் 

சோர்ந்து துவண்ட பயிர் துளிர்க்க 
சுரந்து வான் மேகம்போல் 
என்னை துளிர்க்க வைத்தது ஒரு செய்தி 
எழுத்து(.)காம் எனும் நண்பன் வழியில் 
உறங்கிக் கிடந்த கவி ஏடுகளை 
துயிலில் இருந்து எழுப்புவித்தேன் 
அந்நண்பன் கையில் ஒப்புவித்தேன் 
ஏற்றுக்கொண்டனன் மறுநிமிடம் 
பகிர்ந்து கொண்டனர் பல நண்பர்கள் 
வாழ்த்துக்கள் நெஞ்சை நிறைத்தன 
விமர்சனங்கள் விமோட்சனம் தந்தன 

துவண்ட தூரிகை துரிதமானது 
காணும் யாவையும் கருபொருலானது 
தமிழென்னும் அமுதை விரும்பி பருகினேன் 
தேனுண்ட வண்டாய் மயங்கி உருகினேன் 
கிரக்கம் தெளிவதற்குள் தூரிகை நாடினேன் 
பல கவிதைகள் எளிதில் உருவானது 
தனிமை என்னும் தண்டனை முடிந்தது 
நட்பை நாடும் தாகம் தீர்ந்தது 
எழுத்து(.)காம் நண்பன் துணையால் 
எழுத்துலக நண்பர்கள் பெரும் பேறுபெற்றேன் 

கம்பன் கபிலன் வள்ளுவன் என 
தமிழை வாழவைத்த கவிஞர் பலர் 
பாரதி, அவன் தாசன், கண்ணதாசன் என 
அவளை முத்தமிட்டோர் பல புதுக்கவிஞர்கள், 
அப்படைக்கும் பாவலர் வரிசையிலே 
பலகோடி காதலரை அவளிடம் சேர்த்தாய் 
அந்த வரிசையில் எனையும் கோர்த்தாய் 
உரம் பெற்ற எம் கவிகளுக்கு தரம் கொடுத்தாய் 
தலை வணங்குகிறேன் உன் தமிழ் பணிக்கு

No comments:

Post a Comment