Friday, 20 January 2012

இயற்கை அன்னை பரிசு


இயற்கை அன்னை பரிசு - வாழ்க்கை கவிதை


நீண்ட நெடு வானம்
அதில் தவழும் பொன் நிலவு
கீழ் வானம் சிவந்து
எழுந்து வரும் கதிரோன்
விண்ணைத் தொடும் முகடு
அதை தழுவி விழும் அருவி
அது துள்ளி ஓடும் ஆறாய்
துவண்டு சேரும் கடலில்
கடல் முத்தமிட்ட வான்
அதில் கன்னமிட்ட விண்மீன்
வளர்ந்து முதிர்ந்த ஆலம்
அதை தாங்கிடும் விழுது
அதில் ஊஞ்சலிடும் புள்ளினங்கள்
அவை பாடிடும் தமிழ் கானங்கள்
நடை பயிலும் நாரை
அதன் மடி நழுவும் நண்டு
முகில் கொண்ட மேகம்
அதில் மையல் கொண்ட மயில்
மலையோரச் சாரல்
அதை மகிழ்ந்து அருந்தும் மலர்கள்
செண்டாய் பூத்த மலர்கள்
வண்டாய் மொய்த்த மணம்
இதில் எங்கும் அழகின் சிரிப்பு
இது இயற்கை அன்னையின் பரிசு

No comments:

Post a Comment