
பெண்ணே.....
பூத்த சில நேரத்தில்
மண்ணில் உதிர்ந்த மலரானாய்
பூபாலம் பாடும் நேரத்தில்
முகாதி ராகம் கேட்கிறதே
சீம்பால் அருந்தும் வேலையிலே
கள்ளிப்பால் உனக்கு யார் கொடுத்தார்
ஆணாய் வந்து பிறந்திருந்தால்
அரசாளப் பிறந்தவன் என
ஆர்பரித்திருப்பார் உன் பெற்றோர்
பசு கன்றாய் பிறந்திருந்தால்
கனிந்துருப்பார் உன்னை வளர்ப்போர்
பறவையாக நீ இருந்தால்
தன்னிச்சையாய் வாழ்ந்திருப்பாய்
பட்டுப்பூச்சாய் பிறந்திருந்தால்
பலன் தரும் வரை காத்திருப்பார்
பெண்ணாய் பிறந்த பாவத்தால்
மண்ணில் உதித்த சில மணித்துளியில்
விண்ணுலகம் உன்னை அனுப்பிவைத்தார்
மனசாட்சி அற்ற மனித இனம்
superb! faizle
ReplyDelete